திங்கள், அக்டோபர் 17

கோலாட்டம் (காணொளி)



வாணி விழா நிகழ்வில் இருந்து
1. கோலாட்டம் (காணொளி)

வ/சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய வாணிவிழா 2011 நிகழ்வின்போது இடம்பெற்ற நடனநிகழ்வுகளில் இருந்து ஒரு காணொளி
(பங்குபற்றுபவர்கள் தரம் 6, 8 மாணவிகள்)

ஞாயிறு, அக்டோபர் 9

உலக ஆசிரியர் தினம் -2011



சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற உலக ஆசிரியர் தின நிகழ்வுகளின் படங்கள்.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாலையிட்டு மாணவர்களால் வரவேற்கப்படுவதையும் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளையும் படத்தில் காணலாம். சிறப்பு நிகழ்வாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியும் இடம்பெற்றது. நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்...





































வாணிவிழா நிகழ்வு - 2011






சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள் 06.10.2011 அன்று பாடசாலை மண்டபத்தில் இந்துமாமன்றத் தலைவர் செல்வி சி.சியாமிளா தலைமையில் இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வில் வாழ்த்துரை வித்தியாலய அதிபர் எஸ். சசிகுமார் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள், ஆசிரியர்கள் பங்குகொண்ட விவாத அரங்கு, பரிசளிப்பு நிகழ்வு என்பன இடம்பெற்றன.


நிகழ்வின்போதான சில ஒளிப்படங்களைத் தருகிறோம்.



 இந்துமாமன்றத் தலைவர் செல்வி சி.சியாமிளா தலைமையுரை

வித்தியாலய ஆசிரியர் சு.சுஜதீப் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

வித்தியாலய அதிபர் எஸ்.சசிகுமார் உரையாற்றுகிறார். 
























 ஆசிரியர்களின் விவாத அரங்கு 









வித்தியால ஆசிரியை திருமதி சசிகலா நன்றியுரை.